
பவானி மண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த குடும்பத் தகராறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான மணீஷ் ரத்தோர் என்பவர், தனது மனைவி சரோஜ் ரத்தோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, சரோஜ் தனது கணவர் மீது கொதிக்கும் எண்ணெயும் வெந்நீரும் ஊற்றி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அவர் கைகள், கால்கள் மற்றும் வயிறு பகுதியில் தீவிரமாக தீக்காயமடைந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மனைவி தாக்கிய பிறகு, அவரை அறையில் பூட்டி விட்டதாகவும், அதிகாலை அந்த சம்பவம் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவியளிக்கப்பட்ட பிறகு, ஜலவார் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசாரும் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் இன்னும் பெறப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.