செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாடு முதல்வர் மக்களுடைய நலனுக்காக பல புதிய திட்டங்களை அறிவித்து அதனை சரியாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் ஊரக வளர்ச்சி துறையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. இதுவரை 210 வழங்கப்பட்ட நிலையில் 294 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இது மீண்டும் உயர்த்தப்பட்டு விரைவில் 300 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.