நடிகை குஷ்பூ பட்டியல் இன மக்களை அவமதிக்கும் விதமாக பேசி இருந்ததால் மன்னிப்பு கேட்க விட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. குஷ்பூ தனது X பக்கத்தில் ஒருவருடைய கருத்துக்கு பதில் அளித்தபோது, உங்களுடைய சேரி மொழியில் எல்லாம் பேச முடியாது என்று கூறியிருந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது .சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பூ அவமதி த்துள்ளார் .

பாஜகவுக்கு உரித்தான சாதிய மனோபாவத்தை விஷமாக கக்கி உள்ளார் குஷ்பூ. சேரி மொழி என்று சொல்லி பட்டியல்  இன மக்களை அவமானப்படுத்தும் அளவிற்கு அவருக்கு எங்கிருந்து தைரியம் வந்தது. இவருடைய தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டு உள்ளது. தன்னுடைய தவறை திருத்திக் கொண்டு அந்த பதிவை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும். அதோடு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் பட்டியல் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் பிரிவின் தலைவர் ரஞ்சன்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.