தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க NHAI புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ராஜ்மார்க் யாத்ரா (RAJMARG YATRA) என்ற இந்த செயலி வாகன ஓட்டிகளுக்கு சாலைகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும் புகார்களைப் பதிவு செய்வதற்கும் வசதியாக உள்ளது. இந்த செயலியில் பயணிகள் ஃபோன் இருப்பிடம் மற்றும் மைக்ரோஃபோன் போன்றவற்றை பயன்பாட்டில் அனுமதிக்க வேண்டும்.

ஆண்ட்ராய்டு பயனர்கள் ப்ளே ஸ்டோரிலிருந்தும், ஐஓஎஸ் பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த செயலி சேவைகள் கிடைக்கிறது.