திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர் ஒருவர் 250 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

திருப்பதியில் தினந்தோறும் ஏராளமான உள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வருவது வழக்கம். அப்படி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் மட்டுமில்லாமல் நிலங்களையும் தானமாக வழங்குவார்கள். அந்தவகையில் பெங்களூருவை சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவருக்கு திருப்பதி, நெல்லூரில் 250 ஏக்கர் நிலம் உள்ளது.

இதை தானமாக வழங்கியுள்ள இவர், இந்த நிலத்தில் தேவஸ்தானத்திற்கு தேவையான மலர்கள் மற்றும் தானியங்களை தானே விளைவித்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார். தான் ஏழுமலையானின் தீவிர பக்தர் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளார்.