கேபிள் இல்லாமல் இன்டர்நெட் சேவை செப்டம்பர் 19 விநாயகர் சதுர்த்தி முதல் தொடங்கப்படும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். கடந்த வருடம் ரிலையன்ஸ் ஜியோவின் பொதுக்கூட்டத்தின் போது jioவின் 5g சேவை மற்றும் அதன் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஜியோ ஏர் பைபர் சேவை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை கேபில் இல்லாமல் அல்ட்ரா வேகத்தில் இணைய சேவையை வழங்கும் முறையாகும். இதுவரை எந்த ஒரு நிறுவனமும் அளிக்காத அளவுக்கு அதிவேகமான இணையத்தை இதன் மூலம் பயன்படுத்த முடியும் எனவும் ஃபைபர் சேவையை பயன்படுத்த கேபில்கள் தேவையாக இருக்கும். ஆனால் ஜியோ நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கேபிலின் உதவி இல்லாமல் காற்றிலேயே அல்ட்ரா ஸ்பீட் இணைய சேவையை வழங்க உள்ளது. இந்த புதிய சேவை வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.