செப்டம்பர் 8, திங்கட்கிழமை அன்று, காங்கிரஸ் கட்சி சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தது. இதில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கேயின் பேத்தியின் பிறந்தநாளுக்கு ஒரு தெரு நாய்க்குட்டியை பரிசாக வழங்கினார். கார்கேயின் இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில், ராகுல் காந்தி ஒரு பெரிய பரிசுப் பெட்டியுடன் வருகிறார், அதில் ஒரு சிறிய கூடையில் நாய்க்குட்டி இருப்பதை வெளிப்படுத்துகிறார். அவர் பரிசை கவனமாக பிரித்து, நாய்க்குட்டியை கார்கேயின் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்துகிறார். காங்கிரஸ் கட்சி இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “பெரிய அன்பு சிறிய பெட்டிகளில் வருகிறது. இது கார்கேயின் பேத்திக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு” என்று எழுதியது.
வீடியோவில், நாய்க்குட்டி குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடுவதைக் காணலாம், ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி அந்த நாய்க்குட்டியை தனது கைகளில் ஏந்தியிருப்பார். இந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைதளங்களில் பலரை கவர்ந்தது, பலர் ராகுல் இந்த தெரு நாயை பரிசாக வழங்கிய செயலை இரக்கத்தின் அடையாளமாக பாராட்டினர். ஒரு பயனர், இதற்காக ராகுலை “அடுத்த பிரதமராக” கருத வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். ஆனால், சிலர் பரிசுப் பெட்டியில் காற்றோட்டம் இல்லாததை சுட்டிக்காட்டி, உயிருள்ள விலங்கை இப்படி செய்வது குறித்து விமர்சித்தனர்.
