தமிழக அரசு சார்பில் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை,  ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. 24 மணிநேர பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் பெண்கள் தங்கி கொள்ளலாம்.இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம்.

மேலும் 94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம். www.tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி , கட்டணம் , முன்பதிவு ஆகிய விபரங்களை தெரிந்து கொண்டு பெண்கள் பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.