நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தன்னுடைய திறமையாலும், விடா முயற்சியினாலும் தற்போது நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டு உள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் விரைவில் திரையரங்க உரிமையாளராக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் மகேஷ்பாபு (AMB Cinemas), விஜய் தேவரகொண்டா (AVD Cinemas), அல்லு அர்ஜூன் (AAA Cinemas) உள்ளிட்ட பிரபலங்கள் சொந்தமாக தியேட்டர் வைத்துள்ளனர். அதேபோல், தமிழகத்தில் தானும் ஒரு தியேட்டரை திறக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.