நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.  இதனால், வட மாநிலங்களில் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றனர். மேலும் பாலங்கள், வாகனங்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனை அடுத்து தொடர் கனமழையினால் பலத்த உயிர்சேதம், உடமை இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேன்ஹோலில் இருந்து எலி ஒன்று வெளியே வந்து மழையில் குளித்தது. அந்த எலி தன் கைகளால் தன் உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும் இந்த வீடியோ நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது.