தமிழ் சினிமாவில் இரண்டு மூன்று படங்களிலேயே  பிரபலமானவர் இயக்குனர் அட்லீ. இவர் முதல் முறையாக ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக தெறி படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படங்கள் இயக்கினார். தற்பொழுது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன்தாராவை வைத்து ஜவான் படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் அட்லி 2014 ஆம் வருடம்  துணை நடிகையாக நடித்த கிருஷ்ண பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு மீர் என்ற பெயரை வைத்துள்ளார்கள். இந்த நிலையில் ஜவான் படப்பிடிப்பில் படு பிஸியாக இருந்த அட்லி தற்போது தன் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.