தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்வு முடிவுகளை  மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நினைத்து நேற்று தஞ்சை பாபநாசத்தை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த மாணவி 600க்கு 413 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதாவது ஆராதியா என்ற மாணவி ரிசல்ட் பயத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் உறவினர்கள் வேதனையில் தவிக்கிறார்கள்.

அதன் பிறகு ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த முகேஷ் என்ற சிறுவன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி நடந்த ஒரு சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டான். தற்போது ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில் முகேஷ் 600-க்கு 483 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மேலும் இவ்வளவு அதிகமாக மார்க் எடுத்தும் தங்கள் மகன் உயிரோடு இல்லாததை நினைத்து பெற்றோர் வேதனையில் துடிக்கிறார்கள்.