தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த நானே ஒருவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதே நாளில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் தனுஷ் கூறியது தற்போது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது லாக்டவுன் சமயத்தில் வேலையில்லாமல் இருந்த போதுதான் வெங்கி அட்லூரி தனுசுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாத்தி படத்தை பற்றி பேசியுள்ளார். அந்த சமயத்தில் தனுஷ் வேலையில்லாமல் இருந்ததால் வெங்கி அட்லூரியின் கதையை நிராகரித்து விடலாம் என தனுஷ் நினைத்துள்ளார். ஆனால் வாத்தி படத்தின் கதை மிகவும் பிடித்து விட்டதால் அந்த படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். மேலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் தனுஷே வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்தாரா என்று ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.