தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவியும் நிலையில் தற்போது நடிகர் விஜயின் லியோ படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்திற்காக பட குழுவுடன் சேர்ந்து நடிகை திரிஷா காஷ்மீருக்கு சென்றுள்ள நிலையில், லியோ படத்தில் இருந்து திரிஷா விலகி விட்டதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

அதாவது லியோ படத்தின் அப்டேட்டுகள் தொடர்பான பதிவை தன்னுடைய வலைதள பக்கத்திலிருந்து திரிஷா நீக்கியுள்ளார். இதன் காரணமாகத்தான் த்ரிஷா படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வழக்கமாகவே திரிஷா எந்த பதிவாக இருந்தாலும் 2 நாட்களுக்கு பிறகு அதை தன்னுடைய வலைதள பக்கத்திலிருந்து நீக்கி விடுவார். அந்த வகையில் தான் தற்போதும் தன்னுடைய வலைதள பக்கத்திலிருந்து லியோ படம் தொடர்பான பதிவுகளை நீக்கியுள்ளார். மேலும் இதை தவறாக புரிந்து கொண்ட வலைதள வாசிகள் த்ரிஷா லியோ படத்திலிருந்து விலகிவிட்டதாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.