ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹரன் கோயன், நிஷிகாந்த் கோயன் மற்றும் திவாகர் கோயன் என்ற மூன்று சகோதரர்கள் வேலைக்காக கொல்கத்தாவில் இருந்து கோரமண்டல் ரயிலில் தமிழகம் புறப்பட்டனர். ஆனால் ஒடிசா அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் மரண செய்தி குறித்து தகவல் அறிந்ததும் இவர்களின் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.