பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான குளிர் காரணமாக ஏராளமானோர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 244 குழந்தைகள் நிமோனியா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 942 பேருக்கு நிமோனியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிமோனியா பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.