பீஜிங்கில் நடைபெற்ற 2026 உலக ரோபோ மாநாட்டில் அதிநவீன ஹூமனாய்டு ரோபோ ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து ஆக்ரோஷமாக வலிப்பு வந்தது போல துடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதேசமயம் பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.
நவீன ரோபோக்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு நேரலை விளக்கக் காட்சியில் இந்த ரோபோ கலந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென அதன் ரிமோட் கண்ட்ரோல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் நிலைதடுமாறிய அந்த இயந்திரம் மல்லாந்து விழுந்ததுடன், தனது கைகளையும் கால்களையும் வெறித்தனமாக அசைக்கத் தொடங்கியது.
View this post on Instagram
இதன் அதிவேகமான மற்றும் சீரற்ற அசைவுகள் பார்ப்பதற்கு ஒரு மனிதனுக்கு வலிப்பு வந்தது போலவோ அல்லது ஒரு குழந்தை கோபத்தில் அடம் பிடிப்பது போலவோ இருந்தது. இதைக் கண்ட அங்கிருந்த பார்வையாளர்கள் திகைத்துப் போவதுடன், என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பமும் அடைந்தனர்.
இந்தச் சூழலைச் சமாளிக்க உடனடியாக மனித ஆபரேட்டர்கள் களத்தில் இறங்கினர். பல பொறியாளர்கள் ஓடிவந்து அந்த ரோபோவைக் கட்டுப்படுத்த முயன்றனர்; ஆனால், அந்த இயந்திரத்தை உடனடியாக அணைக்க அவர்களால் முடியவில்லை, வெகுநேரம் போராட வேண்டியிருந்தது.
செயற்கை நுண்ணறிவு, ஹூமனாய்டு ரோபோக்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உலகிற்கு எடுத்துரைக்கக் கூடிய இந்தப் புகழ்பெற்ற மாநாட்டில், எதிர்பாராதவிதமாக நடந்த இந்தத் தொழில்நுட்பக் கோளாறு சமூக வலைதளங்களிலும் நிகழ்ச்சியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
