தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார். இந்நிலையில் இன்று வாக்களிப்பதற்காக சென்னை திரும்பிய நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தன்னுடைய வாக்கினை செலுத்தினார்.

அப்போது ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நடிகர் விஜய்யை பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்தனர். இந்நிலையில் வாக்களிக்க வந்த நடிகர் விஜயின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் அவருடைய ரசிகர்கள் காயம் எப்படி ஏற்பட்டது என கேட்டு வருகிறார்கள். மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஏதேனும் ரிஸ்க்கான காட்சியில் நடித்த போது காயம் ஏற்பட்டிருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.