பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் ரன்பீர் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போது ஆலியா பட், கல் இதயம் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் வீட்டிற்குள் இருந்த இவரை ஜூம் பண்ணி போட்டோ எடுத்த சில மர்ம நபர்கள், அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆலியா, ‘அடுத்தவர்களின் பிரைவஸியில் கேமரா வைத்து பார்ப்பதற்கு அசிங்கமாக இல்லையா என திட்டியுள்ளார். இதையடுத்து ஆலியாவுக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.