பொதுவாகவே குடிமகன்கள் குடித்து விட்டால் அவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இருக்காது. அது தொடர்பான பல வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி நம்மை சிரிப்பில் ஆழ்த்தும். அதன்படி தற்போது கடைவீதியில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மக்கள் அனைவரும் கடைகளுக்கு முன்பு நின்று கொண்டிருக்கும் போது ஒருவர் மட்டும் வேக வேகமாக நடந்து செல்கின்றார். அப்போது சாலையின் ஓரத்தில் மாடு ஒன்று கட்டப்பட்டிருந்த நிலையில் அந்த மாடு முட்டும் என்று அவருக்கு தெரியாது போலும் அவர் நடந்து செல்லும் போது மாட்டுக்கு அருகே செல்கின்றார்.

அப்போது அவர் ஏதோ ஒரு ஞாபகத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த மாடு அவரை முட்டி தூக்குகிறது. இதனால் நிலைகுலைந்த அந்த நபர் சில அடி தூரம் பறந்து சென்று விழுகின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சாலைகளில் கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் கமாண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sudhan Sudhan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sudhancreationtn_46)