வட தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு மே 1ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில் இன்று முதல் மே 1 வரை வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என்று எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் மே 1ஆம் தேதி வழக்கத்தை விட கூடுதலாக அனல் காற்று வீசும் என கூறியுள்ளது.