தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது. இதனையடுத்து தற்போது விஜயுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகை திரிஷா, படத்தில் நடிக்கும் போது நடிகைகளுக்கு கிளாமர் வேறு வேறு இருக்கும்.

எல்லாருக்குமே வித்தியாசமாக இருக்கும். கிளாமர் என்பது கவர்ச்சியோ அல்லது செக்ஸியோ மட்டும் கிடையாது. நான் கிளாமரில் நடிக்க யோசித்து எல்லாம் செய்ய மாட்டேன். கில்லி படத்தில் அந்த கலங்கரை விளக்கத்தில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் அளித்த த்ரிஷா, அந்த சீன் இரவு 2 மணிக்கு எடுக்கப்பட்டது. எனக்கும் விஜய்க்கும் நல்ல தூக்கம் வந்தது.

இரண்டு பேரும் நல்லா தூங்குமூஞ்சாக இருந்தோம். இயக்குனர் எங்களிடம் வந்து ஐயோ இது ரொமான்ஸ் சீன். ரெண்டு பேரும் தூங்குகிறீர்கள் என்று சொன்னாரு. அந்த சீனுக்கு 15 மணி நேரமா ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க. எங்களுக்கு ரொம்ப கலைப்பாயிட்டு. திரையில் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். ஆனா நமக்கு தான் தெரியும் ரொமான்ஸ் எல்லாம் ரொம்ப கஷ்டம் ஆனால் அதை செய்து தான் ஆக வேண்டும்.