நாடு முழுவதும் இன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வ செழிப்பு ஏற்படும் என நம்பப்படுகிறது. தங்கத்தை முதலீடாக கருதுபவர்கள் நகைகளுக்கு பதிலாக தங்க நாணயங்களை வாங்கலாம். ஏனெனில் சேதாரம், செய்கூலி குறைவு தான். இதனால் அதனை விற்கும்போதும் அதிக மதிப்பு கிடைக்கும். தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரம் இன்று காலை 7.49 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி காலை 5.48 மணிக்கு முடிவடைகிறது.