இந்திய ராணுவத்தின் அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வேயில் அரசிதழ் அல்லாத வேலைகளில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் இரண்டு அடுக்குகளுக்கு பணி வாய்ப்பு பெறுவார்கள். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

அவர்களுக்கு உடல் தகுதி சோதனையிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. லெவல் 1 இல் 10%, லெவல் இரண்டுக்கு மேல் அரசிதழ் அல்லாத வேலைகளில் 5% இட ஒதுக்கீடு அக்னி வீரருக்கு வழங்கப்படும். இதில் இட ஒதுக்கீடு முறையையும் rpf வகுப்பு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் பணியாற்றி முடிந்த வீரர்களுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.