கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் பொம்மரலதொட்டியைச்  சேர்ந்தவர் நரசம்மா (65). இவருடைய சகோதரர் சுகுரப்பா. மனநலம் பாதிக்கப்பட்ட அவரை அவரது சகோதரி நரசம்மா கவனித்து வந்துள்ளார். இதற்காக கை மற்றும் கால்களில் செயினை கட்டி அவரை பார்த்து வந்தார். இந்த நிலையில் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து செயினை அடித்து கழற்றி உள்ளார்.

இதனை தடுக்க முயன்ற தனது மனைவி மற்றும் சகோதரியை தாக்கியுள்ளார். இதனால் பயந்து ஓடிய நரசம்மாவை விடாமல் துரத்தி சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுகுரப்பாவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.