மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அகவிலை படியின் தரவு புதுப்பிக்கப்படவில்லை என்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி ஜூலை மாதம் அதிகரிக்கப்பட உள்ளது. ஏ ஐ சி பி ஐ குறியீட்டின் சமீபத்திய தரவுகளின் படி குறியீட்டு எண் 138.9 புள்ளிகளை எட்டி உள்ளது. அதன்படி அகவிலைப்படி 50.84 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஏழாவது ஊதிய குழுவின் படி 2024 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ எண்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தீர்மானிக்கும். அகவிலைப்படி 50.84 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில் இன்னும் 5 மாத எண்கள் வரவில்லை என்றும் இந்த முறை நான்கு சதவீதம் அதிகரிப்பது உறுதி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே இனிவரும் நாட்களில் அகவிலைப்படி 54 சதவீதத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.