தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக புதுச்சேரியில் கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை  கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. வெள்ள நிவாரணம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது அரசாங்கம் நிவாரணம் அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ‌ரூ.5000 மழை பாதிப்பின் காரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு விவசாய நிலம் சேதத்திற்கு ஒரு ஹெக்டே இருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெள்ளத்தில் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு 40,000 ரூபாயும் இளம் கன்று குட்டிக்கு 30000 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பின் 20,000 ரூபாயும் வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பின் 10,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.