உத்தரப் பிரதேசம் கான்பூரில் ராஜீவ் குமார் மற்றும் அவரது மனைவி ரஷ்மி, இஸ்ரேலில் இருந்து கொண்டுவந்ததாகக் கூறிய “Time Machine” மூலம் முதியவர்களை 25 வயது இளமையாக்குவதாகக் கூறி, “ஆக்சிஜன் தெரபி” என்ற பெயரில் சிகிச்சை மையம் திறந்துள்ளனர். இந்த சிகிச்சைக்கு அமர்வு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் மூன்று வருடத்திற்கு ரூ.90 ஆயிரம் சிறப்பு பேக்கேஜ் என்ற விளம்பரத்தை வழங்கினர்.

பல முதியவர்கள் இளைஞர்களாக மாற வேண்டுமென்ற ஆசையில் இந்த சிகிச்சையை மேற்கொண்டபோது, பின்னர் அது ஒரு மோசடி என அறிந்து கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ரேணு சிங், தன்னிடம்  ரூ.10.75 லட்சம் வரை ஏமாற்றி விட்டதாக புகார் செய்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்த, 100க்கும் மேற்பட்டவர்களை இந்த தம்பதிகள் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் ரூ.35 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது, இந்த தம்பதிகள் தலைமறைவாக இருந்து, அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.