மாவட்டங்கள் தோறும் தமிழ்நாடு பொது கல்வித் துறையின் கீழ் பொது நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பொது நூலக சட்டம் 1948 இல் பிரிவு 5-ன்படி மாநில நூலக குழு அமைக்கப்பட வேண்டும். கடந்த 2004 -ஆம் வருடம் இந்த குழு அமைக்கப்பட்டதற்கு பின் இதுவரை மாற்றி அமைக்கப்படவில்லை. சென்னை மாவட்ட நூலகங்களை நிர்வகிப்பதற்கு சென்னை மாநகர நூலக ஆணை குழு அமைப்பும் கடந்த 2010 ஆம் வருடம் கடைசியாக அமைக்கப்பட்டது. மேற்படி குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் போன்றோர் 16/5/2021 அன்று பொறுப்பிலிருந்து விலகி உள்ளனர். இதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குழு மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த குழு 2011 -ஆம் ஆண்டிற்கு பின் சென்னை மாநகரத்திற்கு நூலக ஆணைக்குழு அமைப்பு ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் மாநில நூலக குழு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் துரை செயலாளர்கள் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழ்நாடு நூலக சங்கத்தை சார்ந்த ஜி.இரத்தினசபாபதி, நூலக துறையில் அனுபவம் உள்ள ஜி.கோபண்ணா, சென்னை நூலக சங்கத்தை சேர்ந்த கே நித்தியானந்தம் மற்றும் சென்னை மாநகர நூலக ஆணை குழு உறுப்பினர் சார்பாக ரோஜா முத்தையா, ஆராய்ச்சி நூலக இயக்குனர் ஜி.சுந்தர் உட்பட 15 உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கவிஞர் எழுத்தாளர் மற்றும் பதிப்பாளரான மனுஷய புத்திரன் என்கிற திரு.எஸ்.அப்துல் ஹமீது மற்றும் கவிஞர் எழுத்தாளர் திரு.தமிழ் தாசன் உள்ளிட்ட 11 உறுப்பினர்களைக் கொண்ட சென்னை மாநகர நூலக ஆணை குழுவையும் அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.