ஆந்திர மாநிலத்தில் உள்ள குர்சக் கிராமத்தில் ஒரு மலை மீது இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 17ஆம் தேதி இளைஞர் ஒருவர் பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அந்த மலை மீது ஆள் நடமாட்டம் இல்லை. அந்த சமயத்தில் சில இளைஞர்கள் அங்கிருந்து வந்தனர். அந்தப் பெண்ணை அழைத்து சென்ற இளைஞர் மற்றும் மறைந்திருந்த இளைஞர்கள் என அனைவரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அதன்படி 18 முதல் 23 வயதுக்கு உட்பட்ட 9 இளைஞர்கள் மத வழிபாட்டு தளத்தில் வைத்து ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதோடு இது தொடர்பாக அவர்கள் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். மேலும் பெண்ணை பலாத்காரம் செய்யும் வீடியோ வெளியான நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்த நிலையில் மீதமுள்ள இருவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.