மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் மத்திய பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் முகாமிட்டு தங்கி வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகாமில் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில்  30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.