திருச்சி எஸ் பி அருண்குமார் நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நானும் எனது குடும்பத்தாரும் இணையதள தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என குற்றம் சாட்டினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது .திருச்சி எஸ் பி வருண் குமாரின் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மீது தமிழக டிஜிபி சங்கர் ஜுவாலிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.
நேற்று கோவை ஹோப் காலேஜ் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி வளாகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, திருச்சி எஸ் பி அருண்குமாரை குறிப்பிட்டு மோதுவோம் என்று ஆகிவிட்டது. வா மோதி பார்ப்போம் என கூறியிருந்தார். இந்த நிலையில் பல்லடத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டிற்கு நாம் தமிழர் கட்சி தேவை. ஐபிஎஸ் அதிகாரி அருண் குமார் பேசியதை சீமான் பெரிதுபடுத்த வேண்டாம் என ஆதரவாக பேசியுள்ளார்.