
சென்னை நந்தனம் ஓ.எம்.சி.ஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பாக வெள்ளிக்கிழமை புத்தக கண்காட்சி தொடங்கியது. இதில் ஆயிரம் அரங்குகள் இருந்தது. கடந்த 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். அதேபோல் புத்தக காட்சி வளாகத்தில் உள்ள சிற்றரங்கம், எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் நினைவரங்கில் மாலையில் சிறப்பு உரையரங்கங்களும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்நிலையில் புத்தக கண்காட்சி நிறைவு நிகழ்ச்சி இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்கமகாதேவன் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் நிகழ்ச்சியில் பதிப்பக துறையில் 25 வருடங்கள் பணி புரிந்தவர்கள் புத்தகக் காட்சி நடைபெறுவதற்கு துணை புரிந்தவர்கள் போன்ற கௌரவிக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.