தமிழகத்தில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு நாளை முதல் தமிழகம் முழுவதும் 6 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செவ்வாய் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததால் அரசு அன்றைய தினத்தை விடுமுறையாக அறிவித்தது. மேலும் இதன் காரணமாக நாளை முதல் தமிழக முழுவதும் விடுமுறை. இந்த அறிவிப்பு பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.