சென்னை மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பள்ளி தெருவில் சுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியாக மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சுமதி வேலைக்கு வராததால் சக ஊழியர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் சுமதி அழைப்பை ஏற்காததால் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தார். இந்த நிலையில் சுமதி வீட்டில் இறந்து கிடந்ததை கண்டு அவரது தோழி அதிர்ச்சியடைந்தார். அவருக்கு அருகே எரிந்த நிலையில் அயர்ன் பாக்ஸ் கிடந்தது.

இது குறித்து தோழி சுமதியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுமதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் துணியை அயர்ன் பண்ணும்போது மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி சுமதி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.