ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா இருந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் காலமானார். அதனால் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால் அவர் கடந்த வருடம் உடல்நல குறைவினால் காலமானார்.
இதன் காரணமாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அதன்படி ஜனவரி 10, ஜனவரி 13 மற்றும் ஜனவரி 17 ஆகிய தேதிகளில் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது.