உலகிலேயே மிக உணர்வுபூர்வமான மற்றும் ஆபத்தான சூழலில் வாழும் ‘பிலிப்பைன்ஸ் டார்சியர்’ என்ற விசித்திரமான விலங்கு, சிறிய மனித சத்தத்தைக் கேட்டால் கூட தற்கொலை செய்து கொள்ளும் மர்மமான குணத்தைக் கொண்டுள்ளது.

100 முதல் 150 கிராம் எடையுடன், உடலை விட பெரிய கண்களைக் கொண்ட இந்த அமைதியான உயிரினம், மனிதர்கள் தொடுவதையோ அல்லது கேமராவின் பிளாஷ் லைட் வெளிச்சத்தையோ கூட தாங்க முடியாத அளவுக்கு மிகவும் பலவீனமான நரம்பு மண்டலத்தைக் கொண்டுள்ளது.

காப்பகங்கள் மற்றும் மிருகக்காட்சி சாலைகளில் இந்த விலங்கைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் முற்றிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும்,புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by Amit Saxena || DestiniumWorld ||Travel & Lifestyle 🇮🇳 (@destiniumwithamit)

“>

ஏனெனில், சத்தத்தினால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக இந்த விலங்குகள் உணவை உட்கொள்வதை நிறுத்தியோ அல்லது தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டோ உயிரை மாய்த்துக் கொள்கிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.