குஜராத் பவானிசாகர் சிறையில் ரவி பாரையா என்ற கைதி அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு 33 வயது ஆகிறது. ரவி பாரையா தனது ஆசனவாயில் செல்போனை மறைத்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது சார்ஜர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கைதிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ரவி பாரையா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடலில் சோதனை செய்தும் செல்போன் கிடைக்கவில்லை. உடனே ரவி பாரையாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது ஆசனவாயில் செல்போன் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.