தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, ஜமைக்கா நாட்டின் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ்நாட்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி அன்று நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்ற முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் தமிழ்நாட்டு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் ஜமைக்கா நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அவர் பணிபுரிந்த நிறுவனம் தொடர்பு கொள்ளப்பட்டு உயிரிழந்த விக்னேஷின் உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவரது உடல் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ம் தேதி உடல் கூராய்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கான இழப்பீட்டை அவர் வேலை செய்த நிறுவனத்துடன் ஒருங்கிணைத்து வழங்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான செலவினத்தை தமிழக அரசே  ஏற்றுக் கொள்ளும். விக்னேஷ் வேலை செய்த நிறுவனத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு நிலைமை தொடர்ந்து, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரகத்தினால் கண்காணிக்கப்பட்டு உடலை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உடல் தமிழ்நாட்டு கொண்டுவரப்படும் நிலையில், விமான நிலையத்திலிருந்து அவரது இல்லம் வரை அரசின் கட்டணமில்லா அமரர் ஊர்தி மூலம் கொண்டு செல்லப்படும் என்று அதில் கூறப்பட்டதுள்ளது.