
அமெரிக்காவில் உள்ள நியூ ஹாம்ப்ஷைர் மாநிலத்தில் அலிசியா லியோனார்டி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கடந்த 2-ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் தனது நாயையும் அழைத்துச் சென்றுள்ளார். மரங்கள் நிறைந்த பகுதியில் ரயில் பாதையின் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் ரயில் ஒன்று வந்துள்ளது. அலிசியாவும், அவரது நண்பரும் ஓரமாக நடைப் பாதையில் நடந்து செல்ல, கட்டவிழ்த்து விடப்பட்ட நாய் தண்டவாளத்தில் மிரண்டு ஓடியது.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் நாயை காப்பாற்றுவதற்காக பின்னால் ஓடி உள்ளனர். ஆனால் அவர்கள் நாயை நெருங்குவதற்குள் வேகமாக வந்த ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் அலிசியா பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அவரது நண்பர் லேசான காயங்களுடன் உயர் தப்பினார். அதே சமயம் நாயும் உயிர் தப்பியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.