
இங்கிலாந்தை சேர்ந்த நெஷன் சாடி என்ற மாணவன் லண்டனிலுள்ள கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் பட்டப்படிப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில் படிப்பு சம்பந்தமாக கொலைகளை பற்றி ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டிய இவர் ஒரு உயிரை பறித்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசையுடன் இருந்துள்ளார். ஆகவே கடந்த மே 24-ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஒரு கடற்கரையில் இரவில் முழு நிலவின் கீழ் நெருப்பில் குளிர் காய்ந்த படி அரட்டை அடித்து கொண்டிருந்த ஏமி கிரே, லீன் மைல்ஸ் என்ற 2 பெண்களை நெஷன் சாடி துரத்தி சென்று கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஏமி கிரே உயிரிழந்த நிலையில் மைல்ஸ் பலத்த காயங்களுடன் அங்கிருந்து ஓடி சென்று உயிர் தப்பியுள்ளார். இந்த தாக்குதல் நடத்தியதற்கு முந்தைய நாள் இரவு ஹோட்டல் அறையில் நெஷன் சாடி கத்தியை பயன்படுத்தி கொலை செய்யும் காட்சிகளை அதிகம் பார்த்துள்ளார்.
மேலும் இவர் பல்கலைக்கழகத்தில் கொலை தொடர்பான பாடப்பிரிவில் காட்டியா ஆர்வத்தை பார்த்து நீ ஒன்றும் கொலை செய்ய முயற்சிக்கவில்லையே என ஆசிரியரே கிண்டலாக கேட்டுள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார். வேறு ஒரு ஊரில் கொலை செய்தால் கொலையாளியை பிடிப்பது ஏன் கடினமாக உள்ளது என்றும் கத்திகள் மற்றும் அவற்றின் வகைகள் குறித்தும் ஆன்லைனில் நெஷன் தேடியதும் அவரது வீட்டின் கம்ப்யூட்டரை ஆராய்ந்ததில் விசாரணையின் போது தெரியவந்தது. அதோடு சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நெஷன் சாடி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றது.