
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் ஜமீன் செங்கல்படை கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன்(18) என்பது தெரியவந்தது.
இவர் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கதிரேசன் மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் தண்டவாளத்தை கடந்து சென்ற போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.