
மகாராஷ்டிராவில் மராத்தி மொழிப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா (MNS) சார்பாக நிகழ்ந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
MNS இயக்கத்தை சேர்ந்த ஒருவர், ஒரு முஸ்லிம் வாழும் பகுதிக்கு சென்று, அங்குள்ள மக்களை மராத்தி பேசக் கட்டாயப்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த நபரின் திட்டம் எதிர்பாராத வகையில் திருப்பம் பெற்றது.
Kalesh over this guy opposed a street vendor for not speaking in Marathi but soon mob gathered and Forced him to Apologise in Hindi:
pic.twitter.com/7F37omTfwF— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 6, 2025
அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவரை சுற்றி வளைத்து, நேரடியாக எதிர்த்துப் பேசி, அவரை மன்னிப்பு கேட்க வைத்தனர். குறிப்பாக, மராத்தி பேச வற்புறுத்த வந்த அவரை, ஹிந்தியில் மன்னிப்பு சொல்ல வைத்தது இந்த சம்பவத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.
அவர் ஹிந்தியில் மன்னிப்பு கேட்டு, ஏன் மன்னிப்பு கேட்டேன் என்பதையும் விளக்கி பேச நேர்ந்தது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பகிர்ந்த சில நெட்டிசன்கள், “MNSக்கு மகாராஷ்டிராவில் எந்த பெரிய அமைப்புப் பலமும் இல்லை. அவர்கள் சாதாரண மக்களை மட்டுமே பயமுறுத்த முடியும்.
இப்படிப் பயமுறுத்துவோருக்கு எதிராகக் கூட்டாக நிற்போம் என்றால், அவர்கள் சுலபமாக பின்னடைவார்கள்” எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூகத்தில் விவாதத்தையும், மராத்தி மொழி பிரச்சாரத்தின் எதிரொலியையும் அதிகரித்துள்ளது.