பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் நித்தேஷ் திவாரி. இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த தங்கல் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் உலகம் முழுவதும் 2000 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. தற்போது இயக்குனர் நித்தேஷ் திவாரி ராமாயணா திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ராமராக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், சீதையாக நடிகை சாய்பல்லவியும், ராவணனாக கேஜிஎப் புகழ் நடிகர் யஷ்ஷூம் நடிக்க இருக்கிறார்கள்.

இந்தப் படத்தை பிரம்மாஸ்திரா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நமித் மல்கோத்ரா மற்றும் நடிகர் யஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படம் மூன்று பாகங்களாக வர இருக்கும் நிலையில் ஏ .ஆர் ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைக்க இருக்கிறார்கள். இந்த படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் யஷ் ராவணனாக நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.