
சென்னையில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் 1.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். அதன் பின் அதனை திரும்ப அடைத்துள்ளார். ஆனால் கடன் அடைத்ததற்கான சான்றிதழை வங்கி வழங்கவில்லை. இதன் காரணமாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, வங்கியின் சட்டப்பிரிவு மேலாளர் கார்த்திகேயன் தவறான தகவலை கொடுத்துள்ளார்.
இதனால் செல்வராஜ் மீண்டும் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது நீதிமன்றம் கூறியதாவது, தவறான வழக்குகளை தெரிவித்ததால் கோட்டாக் மகேந்திரா வங்கிக்கு ரூபாய் 1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோட சட்டப்பிரிவு மேலாளர் கார்த்திகேயனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.