
மெக்சிகோ நாட்டின் ஹிடால்கோ மாநிலத்தில், துலான்சிங்கோ நகராட்சியில் உள்ள பகுதியில் ஒரு பெண் நாய்க்குட்டியை மரத்தில் கயிற்றால் கட்டி தொங்கவிட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய்க்குட்டி தரையிலிருந்து ஒரு மீட்டருக்கும் மேலாக உயரத்தில் தொங்கியபோது, தனது உயிரை காக்க போராடும் காட்சியை அருகிலுள்ள ஒரு குடியிருப்பவர் வீடியோவில் பதிவு செய்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பரவி, பலரை கோபப்படுத்தி உள்ளது.
அந்த வீடியோ வைரலான பிறகு, இணையவாசிகள் அந்த பெண்ணை கண்டுபிடிக்க ஃபேஸ்புக் குழுக்களை உருவாக்கி நடத்திய தொடர் விசாரணையில், அந்த பெண் ஹில்டா ‘என்’ என்று அடையாளம் காணப்பட்டார். அவருடைய புகைப்படம் மற்றும் முகவரி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. சிலர் அவரது குடும்பத்தினருக்கும் கடுமையான வார்த்தைகள் மற்றும் மிரட்டல்களை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
😡🤬‼️ATROZ MALTRATO ANIMAL EN HIDALGO‼️⚠️MUJER CVE*LGA A PERRITO DE UN ÁRBOL EN TULANCINGO 🐶🪢🌳
🟡 Esta mujer, identificada como Hilda “N”, fue captada justo cuando colgaba a un lomito indefenso en Santa María Asunción, #Tulancingo, #Hidalgo. La muy sin vergüenza soltó la… pic.twitter.com/wnhTkhcoXD
— ¡QUÉ POCA MADRE! 🇲🇽 (@QuePocaMadre_Mx) June 3, 2025
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து வந்த புகாரை அட்டார்னி ஜெனரல் அலுவலகம் உறுதி செய்தது. அதன் பேரில், ஜூன் 2ஆம் தேதி சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் அந்த நாயை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பினர். தற்போது அந்த நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விலங்கு துஷ்பிரயோகத்தைக் குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஹிடால்கோ மாநிலம் முழுவதும் இந்தச் சம்பவம் குறித்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.