கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தகடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தம்பிகளுடன் சேர்ந்து டிராவல்ஸ் மற்றும் சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன் என்ற மகனும், சரவண பிரியா என்ற மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று முருகன் தனது சகோதரர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது நித்யா குறுக்கிட்டு பேசியதாக தெரிகிறது. இதனால் முருகன் தனது மனைவியை திட்டி உள்ளார். ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் நித்யா தனது கணவர் திட்டியதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நித்தியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.