வரதட்சணை மற்றும் சூதாட்ட அடிமைத்தனத்தின் விளைவுகள் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு சோகமான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதிலிருந்து ரூ.15 லட்சம் வரதட்சணைக் கேட்டு கணவனால் பாதிக்கப்பட்ட பெண் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார், சமீபத்தில் சூதாட்டத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கணவனால் அப்பெண் அடகு வைக்கப்பட்டாள்.

இதையடுத்து தகவலறிந்த அந்தப் பெண்ணின் சகோதரன் தலையிட்டு அவளைக் கொடூரமான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.  அதைத் தொடர்ந்து, நிதிச் சுரண்டல் மற்றும் அடமானமாகப் பயன்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட அவமானத்தை தாங்கி கொள்ள முடியாத  மனைவி, கணவரின் செயல்களைப் பொறுத்து கொள்ள முடியாமல்,  காவல்துறையில் புகாரளிக்க, வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.