சென்னை மாவட்டத்தில் உள்ள ஓ.எம்.சி.ஏ விளையாட்டு திடலில் புத்தகக் கண்காட்சி வெளியீடு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதில் எழுத்தாளர் பால முரளி வர்மன் அவர்கள் தொகுத்த “தமிழ் தேசியம் ஏன்?, எதற்கு?, எப்படி?” என்ற நூலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய சீமான் கூறியதாவது, திமுக ஆட்சியின் அழுத்தத்துக்கு, அச்சுறுதலுக்கும் பயந்து தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஒரு பக்கமாக செயல்படுவது அபயகரமானது.

பாரதிதாசனின் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக புதுச்சேரியில் இருப்பதாலே தமிழ்நாட்டில் ஒழிக்க செய்யக்கூடாது என்பதை அடிப்படை இல்லாததாகும். புத்தக கண்காட்சி அரங்கில் மிகப்பெரிய அறிஞர்கள் இளங்கோவடிகள், கம்பர், பாரதிதாசன், வள்ளலார் என தமிழ் முன்னோர்களின் வரிசையில் ஐயா கருணாநிதியின் பெயரை எவ்வாறு சூட்டினீர்கள்? பெருந்தலைவர் காமராசரின் பெயர் இல்லாமல் ஐயா கருணாநிதி பெயர் மட்டும் எவ்வாறு வந்தது? ஒவ்வொரு புத்தக கண்காட்சி அரங்கிலும் திமுகவையும், திராவிடத்தையும் மட்டுமே புகழ்ந்து பேசிக்கொள்ளலாம்.

அறிவுலகப் பெருமக்கள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறி நிற்பது ஏன்? எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். மேலும் தென்னிந்திய புத்தகப் பதிப்பகாரர்கள் மற்றும் விற்பனையாளர்களின் சங்கம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒருதலையாக செயல்படுவது மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், டிஸ்கவரி பதிப்பகத்தின் நிறுவனர் தம்பி வேடியப்பன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.