மெஸ்சியா மற்றும் ரொனால்டோவா ஆகியோரில் ஒருவரை நிலையான வீரர் என முன்னர் தேர்வு செய்து இருக்கின்றார் மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே என்று தகவல் வெளியாகியுள்ளது. பீலே ஸ்ட்ரைக்கராக பிரேசில் மற்றும் கிளப் அணிகளான பேன்ட்டூஸ் மற்றும் நியூயார்க் ஆஸ்மோஸ் அணிகளுக்காக விளையாடிய காலத்தை கடந்த வீரராக கொண்டாடப்படுகின்றார். 1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் உலக கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பு முக்கிய காரணமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி பீலே தனது 82-வது வயதில் காலமானார். இதனிடையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யுடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அப்போது பீலேவிடம் தற்போதைய கால்பந்து வீரர்களில் இரண்டு ஜாம்பவான்களான மெஸ்சியா மற்றும் ரொனால்டோவா ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யுங்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பீலே பதில் கூறுகையில், இப்போது ரொனால்டோ மிகவும் நிலையான வீரர் என்று நான் நினைக்கிறேன். ஆனால் மெஸ்சியாவை புறம்தள்ள முடியாது என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.